நமக்கு வாயுத்தொல்லை இருக்கும்போது நெருப்பு பக்கம் போனால் என்னாகும் தெரியுமா ?

 
stomach

நமக்கு வாயு பல ரூபத்தில் வந்து தொல்லை படுத்துகிறது .நாம் சாப்பிடும்போதோ ,டீ காப்பி குடிக்கும்போதோ வாயுக்கள் நம் குடலுக்குள் செல்கிறது .பின்னர் உள்ளே சென்ற வாயுவின் ஒரு பகுதி  நம் உடலின் ஆசன வாயு வழியாக வெளியே செல்கிறது .வயிறு உப்பிசம் ,வயிறு வலி ,ஏப்பம் ,வயிறு எரிச்சல் ,நெஞ்செரிச்சல் போன்றவை வாயு தொல்லைக்கு எடுத்துக்காட்டுகள் .பொதுவாக வாயுக்கள் நம் சுவாச பாதையிலும் உணவு பாதையிலும்தான் பாதிக்கும் .சிலர் சொல்வதை போல் உடல்வலி ,இடுப்பு வலி ,கை கால் வலியெல்லாம் வாயுவால் வருவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .

Gas

இப்படி வயிற்றில் வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதைக் கேட்டால் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள். அதாவது, மனிதர்கள் வெளியிடும் அபாண வாயுவானது, தீப்பிடிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்ற ஒரு ஆச்சர்யமான தகவலை மருத்துவர்கள் கூறுகின்றனர்

. இப்படி நம் உடலில் உற்பத்தியாகும் வாயுவில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபேட் போன்றவை இருப்பதால், இவை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படும் நேரத்தில், சிறிதளவு நெருப்புப் பொரி பட்டால், இந்த வாயுவில் வேதியியல் எரிப்பு வினை நடைபெறும்என்ற அதிர்ச்சியான தகவலை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .