வெள்ளரிக்காயை கண்களின் மேல் வைத்து வந்தால் என்னாகும் தெரியுமா ?

 
Digital Eye Strain

அதிக வேலை சுமை ,தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் இருந்தால் கண்களை சுற்றி கருவளையம் தோன்றும் ,இது நமக்கு சிறுவயதிலேயே முதிய தோற்றத்தை கொடுக்கும் .இந்த கரு வளையத்தை போக்க உருளை கிழங்கின் சாறில் துணியை முக்கி ,வளையம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் .மேலும் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறினை ஒன்றாக கலந்து அந்த கருவளையம் உள்ள இடத்தில் வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்

1. கண்களில் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காயை  சிறு துண்டுகளாக வெட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்பு கண்களின் மேல் வைக்க வேண்டும் .இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் கருவளையம் மறையும்.

 eye

2. நீரில் துணியை  முக்கிய பின் கண்களை மெதுவாக ஒத்தி எடுக்கலாம் அல்லது சாதம் வடித்த நீர் குளிர்ந்த பிறகு துணியை முக்கி கண்களின் மேல் 10 முதல் 15 நிமிடம் வைக்க வேண்டும் பின்பு தண்ணீரில் கழுவலாம்.இதனால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

3.கண்களில் உள்ள கருவளையம் மறைய டீ போட பயன்படுத்தும் சிறிய டீ பாக்கெட்டுகளை பயன்படுத்திய பிறகு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து பின்பு கண்களில் 10 -15 நிமிடம் வைத்திருந்து கழுவ வேண்டும்.

4.கண்களில் உள்ள கருவளையம் மறைய குளிர்ந்த பாலில்  பஞ்சை முக்கி கண்களைச் சுற்றி தடவ வேண்டும் பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்