கொத்தமல்லி குடிநீர் குடித்து வந்தால் எந்த நோய் நீங்கும் தெரியுமா ?

 
Coriander


கொத்தமல்லி விதைகள், சந்தன சிராய்கள் மற்றும் நெல்லி வற்றலை சம அளவில் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் தலைசுற்றல் குறையும்.

சந்தனத்துடன் மல்லிவிதைகளை அரைத்து தலையில் பற்று போட்டு வந்தால் தலைவலி உடனடியாக குறையும்.
மல்லிவிதை மற்றும் கசகசாவை அரைத்து பொடியாக்கிக்கொண்டு மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமான பாதை ஆரோக்கியமாக இருக்கும்.
பனைவெல்லத்தைக்கொண்டு தயாரிக்கப்படும் கொத்தமல்லி குடிநீர் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கை குறைக்க உதவும்.
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடலில் பித்தத்தை குறைக்கும் கொத்தமல்லி விதையை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.
செம்பருத்தி பொடி, மருதம்பட்டை பொடி மற்றும் மல்லித்தூள் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர மதுவெறியர்களுக்கு மதுவின் மீது உள்ள ஆசையை குறைக்கும்.
டீ மற்றும் காபிக்கு பதிலாக தினமும் சீரகம், சுக்கு, கொத்தமல்லி விதைகள் மற்றும் உலர்ந்த துளசி இலைகள் போன்றவற்றை அரைத்து பொடிசெய்து வெந்நீரில் கலந்து கொத்தமல்லி பானத்தை அருந்தலாம்.
கொத்தமல்லி விதைகள் மற்றும் புதினா இலைகளை மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
கொத்தமல்லி விதைகளை கொண்டு எடுக்கப்படும் எண்ணெயை 2 துளி அளவில் உண்டால் வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.