இரவில் தேங்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 
coconut coconut

நாம் புதிதாக ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலும் சரி ,அதை பூஜித்து தேங்காய் உடைப்பது வழக்கம் .அது மட்டுமல்லாமல் பிள்ளையாருக்கு பல வேண்டுதல்களை வைத்து அதற்கு தேங்காய் உடைப்பவர்கள் உண்டு .அப்படிப்பட்ட தேங்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .தேங்காய் தண்ணீர்  அல்சர் உள்ளோருக்கு சிறந்த மருந்து .இந்த நோயாளிகள் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம் .தேங்காய் இதயம் கிட்னி ,கல்லீரல் போன்ற உறுப்புகளை காக்கும் ,மேலும் இதன் சிறப்பு ஒரு ஆப்பிளை விட அதிக ப்ரோட்டின் உள்ளது .வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் தினம் ஒரு இளநீர் குடிக்கலாம் உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.

coconut oil

முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.

. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளை பெறலாம்.

1.தூங்கும் முன் பச்சையாக தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள கொழுப்பு உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும்

2.இரவு தூங்கும் முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்.

3.தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.