தாய் எதை சாப்பிட்டா ,குழந்தை சதை போடும் தெரியுமா? .

 
j baby

ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் தங்கள் உடலை அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டும் என்றால் உடம்பில் அதிக அளவிலான சத்துக்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.குழந்தை பெற்ற பெண்கள்  சத்தான உணவுகள் சாப்பிட்டாலே குழந்தை ஆரோக்கியமாகவும், ஹெல்த்தியாகவும் வளரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .

Baby

சரி வாங்க குழந்தை பெற்ற பின் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை பார்க்கலாம்.

தாய்மை அடைந்த பெண்கள் தானிய வகைகளான ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி இது போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும் .இதில் வைட்டமின் பி ஊட்டசத்து உள்ளது. இது போன்ற சத்துக்கள் முழுமையாக கிடைப்பதால் தாய்க்கு பால் உற்பத்தியை அதிமாக தூண்டும் ஆற்றலை கொண்டது. தாய்மை அடைந்த பெண்கள் தானியங்களை பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நார்ச்சத்துக்கள் வளர்ச்சி பெற்று குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தாய்மை அடைந்த பெண்கள் கட்டாயமாக உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை தவிர காய்கறிகள் கலந்த சூப், தேங்காய் நீர், ஜுஸ் இது போன்ற தண்ணீர் வகைகளை எடுத்து கொள்ளலாம். அதிக தண்ணீர் குடிப்பதால் பால் சுரக்கும் தன்மை மேம்படும்.

தாய்மை அடைந்த பெண்கள் சிக்கன் மற்றும் வான்கோழி இறைச்சிகளை சாப்பிட்டால் உடலில் புரதத்தை அதிக படுத்தும். நாட்டு கோழியின் இறைச்சி, முட்டை போன்ற உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. தாய்மை அடைந்த பெண்கள் கொழுப்பு குறைந்த இறைச்சிகளை எந்த வித தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.