வாரம் இரண்டு முறை நெல்லி காய் சாப்பிடுவோருக்கு எந்த நோய் வராது தெரியுமா ?

 
amla

பொதுவாக நெல்லிக்காயில் அளவு கடந்த விட்டமின் சி உள்ளது என்பதால்தான் அந்த காலத்தில் பள்ளிக்கூட வாசலில் நெல்லிக்கனி விற்றனர் .அதை வாங்கி சாப்பிடும் மாணவர்களுக்கு உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவானது .ஆனால் அந்த நெல்லிக்கனியின் மகத்துவம் இன்றைய தலை முறையினருக்கு கொரானா காலத்தில்தான் தெரிய வந்தது .அந்த நெல்லிக்கனியில் ரத்தத்தில் நம் சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாக்கும் .மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகாமல் நம்மை பாதுக்காக்கும் உடம்பிலும் ,வயிற்றிலும் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது ,நம் உடலில் கழிவுகள் வெளியேறாவிட்டால் அது பல நோய்களை உருவாக்கும் ,ஆனால் நெல்லிக்கனி உண்டால் நம் உடலில் கழிவுகளை வெளியேற்றி நம்மை பல பெரிய நோய்களிலிருந்து காக்கும் .ஆனால் நெல்லிக்கனியை சிறுவர்களுக்கு இரவில் கொடுத்தால் சளி பிடிக்கும் ,அதனால் பகலில் கொடுக்கலாம் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

amla

1. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது மிகவும் நல்லது.

2. கண் பார்வை மேம்பட நெல்லிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.

3.நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.  நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.