ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
sugar

ஆவிரைன்னு அந்த காலத்தில் அழைக்கப்பட்ட ஆவாரம் பூ வை வீடுகளுக்கு தோரணம் கட்டவும் ,மாடுகளுக்கு மாலை கட்டவும் பயன்படுத்தறாங்க .சாலைகளின் இருபுறங்களிலும் மஞ்சள் நிறத்தில் பூத்திருக்கும் முக்கியமாக கிராமப்புற சாலைகள் எங்கும் காணலாம். இதன் பலன் பலருக்கும் புரிவதில்லை.மேலும் அதில் நிறைய மருத்துவ குணம் உள்ளது .இது பல நோய்களுக்கு மருந்தாக செயல் படுகிறது

1.சர்க்கரை  நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம்.

sugar

2.சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ கஷாயம் ஒரு சூப்பர் மருந்து

3.ஆவாரம் பூ பொடியை பாசிப்பயியிருடன் கலந்து குளியல் பொடி செய்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகும். ஆவாரம்பூ சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

4.ஆவாரம் பூ அல்லது பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.

5.ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும்.

6.ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு