நாம் தினம் தண்ணீர் குடிக்கும் பிளாஸ்டிக் பாட்டில் பயங்கரம்.

பொதுவாக நாம் எப்போது கேன் தண்ணீரும் ,பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரும் குடிக்க ஆரம்பித்தோமோ அப்போதே புது புது நோய்கள் நம்மை தாக்க ஆரம்பித்து விட்டன .நம் முன்னோர்கள் பானை தண்ணீர் குடித்து எந்த நோயுமின்றி ஆரோக்கியமாய் வாழ்ந்தனர் .எனவே பானை தண்ணீரால் உண்டாகும் பயன்கள் பற்றியும் ,பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் நேரும் பயங்கரம் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு செரிமானப் பிரச்சனைகள், மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் இருக்கும் .இப்படி உள்ளவர்கள் மண் பானை தண்ணீரை குடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்
2.களிமண் பானைகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் உடல் பருமன் உள்ளோருக்கு பருமனை குறைக்க உதவும்
3. பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கும் நீர் ரசாயன தன்மை உடையது , களிமண் பாட்டில்களில் உள்ள நீர் முற்றிலும் இரசாயனமற்றதால் உடலுக்கு நன்மை தரும்
4.புற்றுநோய் போன்ற பலநோய்களுக்கு மூலகாரணமாக இருக்கும் இந்த ரசாயனம்.
5.களிமண் பானைகளில் சேமிக்கும் நீர் நம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவைத் தக்கவைக்கிறது.
6.மேலும், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் நம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது
7.மேலும் களிமண் பாட்டில்களில் சேமிக்கப்படும் நீர், நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அப்படியே வைத்திருக்கும்
8.ஆகவே முடிந்தளவு மட்பாண்ட பாத்திரங்களை பயன்படுத்தி ,ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்