பால் டீ க்குள் பதுங்கியுள்ள பயங்கரமான பக்க விளைவுகள் .

 
tea shop

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் நீராகாரம் என்னும் பழைய சோற்றில் ஊற வைத்த தண்ணீரை தினம் காலையில் குடித்து ஆரோக்க்கியமாக வாழ்ந்து வந்தனர் .ஆனால் இன்று காலையில் பெட் காபி என்றும் பெட் தேநீர் என்றும் காலையில் குடித்து பல நோய்களுக்கு ஆளாகின்றனர் .இந்த பாலில் கலந்த தேநீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய ரசாயன மாற்றம் நடைபெற்று நம் உடலில் பல தொல்லைகள் ஏற்படுகிறது .மேலும் இது மன அழூத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை உண்டாக காரணமாகிறது .மேலும் இந்த பால் டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

tea

1.சிலருக்கு வயிறு பிரச்சனை இருக்கும் ,அவர்கள் பால் டீயை அதிகமாக குடிப்பதால் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

2.சிலருக்கு அஜீரண கோளாறு எப்போதும் இருக்கும் ,அவர்கள் இந்த தேநீர் குடித்தால் இதில் காணப்படும் டானின்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்று வலியை ஏற்படுத்துகிறது.

3.சிலருக்கு மலசிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும் ,அவர்கள் இந்த பால் தேநீர்   காரணமாக  மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக செய்யலாம்.

4.சிலர்  பதட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ,அவர்கள்  அடிக்கடி தேநீர் அருந்துவதை நிறுத்துங்கள்.

 5.தேநீரில் உள்ள காஃபின்  தூக்கமின்மையை ஏற்படுத்தி ,இரவில் தூங்க முடியாமல் செய்து விடும் 

6.சிலருக்கு பிபி இருக்கும் ,அவர்கள் அதிகப்படியான பால் டீ குடிப்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.