எறும்பு கடிச்சாலும் ஆன்டிபயாட்டிக் மருந்து சாப்பிடுறவங்க ,இதை படிச்சா துடிச்சு போய்டுவிங்க

 
health tips for each

ஆன்டிபயாட்டிக் மருந்து ஒருவருக்குத் தேவையா, இல்லையா என்பதை அறிய நோயாளியின் ரத்தம், சிறுநீர், புண் சீழ் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வளர்த்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப்படுகின்றன என்று பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு கல்ச்சர் அண்டு சென்சிட்டிவிட்டிச் சோதனை (Culture and Sensitivity Test) என்று பெயர். இதன் முடிவுகள் தெரிய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும். பரிசோதனையின் அடிப்படையில் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை ஆகியவற்றுக்கேற்றாற்போல மருந்துகளின் அளவு பரிந்துரைக்கப்படுகிறது.

உதாரணமாக, 10 கிலோ வரை உள்ள ஒரு வயதுக் குழந்தைக்கு டிராப்ஸ் வடிவில் சிறிதளவு ஆன்டிபயாட்டிக் கொடுக்கப்பட வேண்டும். 20 கிலோவுக்கு மேல் 5 – 7 வயது உள்ளவர்களுக்கு பாதியளவும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரை, கேப்சூல், ஊசி, மருந்துகள் வடிவில் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், நோயாளிகளோ உடனடியாகக் குணமாக வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடித் தீர்வையே விரும்புகிறார்கள். இதனால் மருத்துவர்கள் வீரியம் நிறைந்த (Heavy Doses) ஆன்டிபயாட்டிக் மாத்திரை மற்றும் ஊசிகள் மூலம் குணப்படுத்த முயல்கிறார்கள். அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

என்னென்ன பாதிப்புகள்?

ன்டிபயாட்டிக் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவதாலும் தேவையில்லாமல் பயன்படுத்துவதாலும் காலப்போக்கில் உடலின் நோய் திர்ப்புச் க்தி பாதிக்கப்படுகிறது. மேலும், அடிக்கடி இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் லின் ஜீரண உறுப்புகள் கெட்டு, உடம்பிலுள்ள பி காம்ப்ளெக்ஸ் சக்தியில் இழப்பு ஏற்படுகிறது. மேலும் நாவறட்சி, வாய் துர்நாற்றம், தொண்டையில் புண் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.மருந்து அலர்ஜி இருந்தால் சருமம் சிவந்துபோதல் மற்றும் தடிப்புகள் ஏற்படுகின்றன.

ஆன்டிபயாட்டிக் ரெஸிஸ்டன்ஸ்

ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுத்த ஆன்டிபயாட்டிக் மருந்தைப் பாதியிலேயே சிலர் நிறுத்திவிடுவார்கள். சிலர் இடைவெளி விட்டுச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் தேவையான அளவுக்குச் சாப்பிடாமல் இருப்பார்கள். சிலர் குறைந்த அளவிலோ அதிகளவிலோ சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற காரணங்களால் உடலில் அந்த நோயை உண்டாக்கிய கிருமிகள் முற்றிலும் அழியாமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க மீதமுள்ள கிருமிகள், தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். அதாவது, கிருமிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியானது ஆன்டிபயாட்டிக் மருந்து களுக்கு எதிராக வலுப்பெறத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில், அவை ஆன்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ஆற்றலைப் பெற்றுவிடும். இதையே, ஆன்டிபயாட்டிக் ரெஸிஸ்டன்ஸ்(Antibiotic Resistance) என்கிறோம்.

தவிர்ப்பது எப்படி?

1. நோய்க்கான காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது. முக்கியமாக ஆன்டிபயாட்டிக் மருந்து தேவையா என்று தெரிந்த பிறகே, அதைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், ஆன்டிபயாட்டிக் எல்லாவிதமான நோய்களுக்கும் அவசியமில்லை. சில நோய்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அத்தகைய நோய்களுக்கு உண்டான மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தினால் அது சரியாகிவிடும்.

2. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எத்தனை நாள்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோ அத்தனை நாள் மட்டுமே உட்கொள்வது சிறந்தது. நோயின் தீவிரம் குறைந்துவிட்டதென இடையில் நிறுத்துவதோ, அதைவிடக் கூடுதலாக உட்கொள்ளவோ கூடாது.

3. பெரியவர்களுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஒருபோதும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

காய்ச்சல், சளி, தலைவலி என சாதாரண உடல் உபாதைகள் தொடங்கி, அறுவை சிகிச்சைகள் வரையிலும் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் நமக்கு எழுதித் தருவது வழக்கமாக உள்ளது. 


இவை நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் தொற்று ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்றன. ஆனால், அதிகளவில் அதாவது நாள்தோறும் ஆன்டிபயாடிக் மருந்துகளை நாம் உண்பதால், அவற்றின் எதிர்ப்புத் திறன் குறைந்து, அவை பாக்டீரியா வளர்ச்சிக்கு அதிகளவில் உதவுவதாக, லண்டனைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் உடலில் குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் எச்செரிஷியா கோலி (E.Coli) எனப்படும் பாக்டீரியா அதிகளவில் உள்ளது. இது மிகக் குறைவாக இருக்கும்போது, உணவுச் செரிமானம் தொடங்கி பல்வேறு உடலியக்க நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக உள்ளது.

ஆனால், இந்த பாக்டீரியா அளவுக்கு அதிகமாக மாறும்போது, பல்வேறு வயிற்று உபாதைகள், சிறுநீரகக் கோளாறு வரை ஏற்படுகிறது. இதன்படி, சாதாரண பிரச்னைகளுக்குக்கூட நாம் பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள், இந்த எச்செரிஷியா கோலி பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைகின்றன. வயிற்றுப் பகுதியில் மேன்மேலும் இது வளர்வதால், தீவிர உடல்நலக் கோளாறுகளை நாம் சந்திக்க நேரிடும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட எல்லை அல்லது தேவையில்லாத பட்சத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.