சளியானாலும் , வலியானாலும் ஆன்டி பயாட்டிக் சாப்பிடுவோர் இதை அவசியம் படிங்க

 
tablet

பொதுவாக நம் உடலில் ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் குறிப்பாக சளி வந்தாலும் உடலில் வலி வந்தாலும் ஆங்கில மருத்துவர்கள் ஆன்டி பயோட்டிக் மருந்துகளை கொடுக்கின்றனர் ,இது தவிர சிலர் தாமாகவே மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்கி உண்கின்றனர் .இந்த ஆன்டி பையோட்டிக் மருந்து விஷயத்தில் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .சில ஆன்டி பையோட்டிக் மருந்துகள் கிட்னி மற்றும் லிவருக்கு கெடுதல் புரிகிறது .அதனால் நாம் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கூட உண்ணலாம் .அவை இஞ்சி ,பூண்டு ,தேன் ,வெங்காயம் போண்ற பொருட்கள் .மேலும் இது பற்றி பார்க்கலாம்

tablet

1.சிலர் ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது, அதிக மசாலா பொருட்களை சாப்பிடுவர் .இப்படி காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் வயிற்றுப் புண், அல்சர் அல்லது செரிமான பிரச்னைகள் உருவாகி நம் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்

2.சிலர் கண்ட நேரத்தில் இந்த மருந்துகளை எடுத்து கொள்வர் ,இப்படி மற்ற மருந்துகளுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளும் சாப்பாட்டுக்கு பிறகு உட்கொள்வது உடலுக்கு நல்லது.பக்க விளைவுகள் வராமல் காக்கும்

3.ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது , மருந்துவர்களின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். அதில் சிறு தவறு நடந்தால். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்