குங்குமப்பூ ஃபேஸ்பேக் செய்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக குங்குமப்பூவில் இயற்கையாகவே மிக சிறந்த தூயமையாக்கும் பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்பு குணமும் நிறைய இருக்கிறது . மேலும் குங்குமப்பூவை கொண்டு சருமத்தை அழகாக்கும் ஃபேஸ்பேக் செய்து முகத்தை அழகாக்கலாம் .இது எப்படி சாத்தியம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக குங்குமப்பூவில் உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் ஏராளமாய் இருக்கிறது.
2.முதலில் சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி கொள்வோம் .இந்த கலவையை வாரத்துக்கு இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் முகம் சிகப்பாக மாறும்
3.அடுத்து குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்வோம் . அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதனுடன் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து வைத்து கொள்வோம்
4. இந்தக் குங்குமப்பூ கலவையை முகத்தில் பூசி வர வெயிலால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைந்து விடும் .
5.குங்குமப்பூ ஃபேஸ்பேக் செய்ய குங்குமப்பூ – 5, நெய் – 1 ஸ்பூன், மயோனைஸ் – 1 ஸ்பூன்.எடுத்து கொண்டு ,இதை எப்படி செய்வது என்றும் நாம் காணலாம்
6. முதலில் குங்குமப்பூவினை மயோனைஸில் 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து கொள்வோம் .
7.அடுத்து இந்த குங்குமப்பூ உடன் நெய்யினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
8.இப்போது நாம் தயாரித்த இந்த குங்குமப்பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.
9.அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு விடவும் ,
10.குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.


