குழந்தையின்மை பிரச்சினையுள்ளோர் இந்த அரிசியில் சமைத்து சாப்பிடுங்க

பொதுவாக மூங்கிலரிசி என்று அழைக்கப்படும் இந்த அரிசியானது நமக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது .இந்த அரிசி மூலம் நாம் எந்த வகையான ஆரோக்கியத்தை பெறலாம் என்று காணலாம்
1.இது நம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ,சர்க்கரை நோய் வந்து உடல் மெலிந்தவர்கள் இந்த அரிசி உணவை சாப்பிட்டால் உடல் நல்ல புஷ்டியுடன் காணப்படுவர் .
2.மேலும் குழந்தையின்மை பிரச்சினையுள்ளோர் இந்த அரிசியை 48 நாட்கள் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு ,
3.மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் ,மேலும் இது பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களின் உடலுக்கு வலு சேர்க்கும் .
4.மூங்கில் அரிசி நார்ச்சத்து நிறைந்த உணவு. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டும் அல்ல எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இதனால் மூட்டுவலி குறையும்.இதை எப்படி சமைக்கலாம் என்று பார்க்கலாம்
5..முதலில் இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மூங்கிலரிசியை ஊற வைக்கவும்.
.பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை , வரமிளகாய் கிள்ளி போட்டு தாளித்து கொள்ளவும் .
6.அதன் பிறகு அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது , நறுக்கிய வெங்காயம் , பட்டாணி , பீன்ஸ் , காலிஃபிளவர், பாசிப்பருப்பு சேர்த்துநன்றாக வதக்கவும்.
7.இதனுடன் அரைத்த கொத்தமல்லி , புதினா , பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
.மூங்கில் அரிசிக்கு 1:3 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிட்டு 3விசில் வந்ததும் இறக்கி சாப்பிடவும் ..