இந்த கடலையை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு எந்த காலத்திலும் கர்ப்பப்பை கோளாறு வராது

 
weight loss tips women

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

நிலக்கடலையில் (Peanut) போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, இனப்பெருக்கம் விரைவாக நடக்க உதவும். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது. நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் சத்து, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதோடு, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் ஈர்க்க உதவுகிறது.

உடல் எடையை பராமரிக்க (To maintain body weight)

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில், உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களுக்கும் வேர்க்கடலை (Peanut for Weight Loss) சிறந்தது. அதில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

இளமையை பராமரிக்க உதவும் நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் (Antioxidant in Peanut) நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் விட்டமின் 3 நியாசின் உள்ள நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம். தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய நரம்புகளை பாதுகாக்கிறது. இதயநோயை தடுக்கிறது. மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

மூளையை உற்சாகப்படுத்த (Stimulate Brain)

நிலக்கடையில் உள்ள பரிப்டோபான் என்ற அமினோ அமிலம், செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதனால், மூளை நரம்புகளை தூண்டி, மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தமே ஏற்படாது. இதில் போலிக் ஆசிட் சத்துக்கள் அதிகம் நிரம்பி உள்ளது.