ஆஸ்பத்திரியையே மறக்க செய்யும் இயற்கை வைத்தியம் இருபது
நம் முன்னோர்கள் ஆஸ்பத்திரிக்கே போகாமல் நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள் .ஆனால் இன்று எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு ஆஸ்பத்திரி ஸ்கேன் ,ஈசிஜி என்று அலைகிறார்கள் .பல நோய்களுக்கு வைத்தியம் நம் வீட்டு கிச்சன் பொருட்களிலேயே உள்ளது .அந்தளவுக்கு நம் முன்னோர் மருந்தை உணவாக நம்மை உண்ண வைத்தனர் .இப்போது இந்த பதிவில் இயற்கை வைத்தியம் இருபதை ஒரு வரிகளில் சொல்லியிருக்கிறோம் .அவற்றை படித்து பயன்பெறுங்கள்
1)என்றும் 16 வயது வாழ தினம் ஓர் “நெல்லிக்கனி.”சாப்பிடுங்கள்
2) இதயத்தை வலுப்படுத்தி இதய நோய் நம்மை நெருங்காமல் காக்கும் “செம்பருத்திப் பூ“.
3) எலும்பு தேய்ந்து போவதால் வரும் மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை.”
4) இருமல், மூக்கடைப்பு வந்து மூச்சு விட முடியாமல் இருப்பதை குணமாக்கும் “கற்பூரவல்லி” (ஓமவல்லி).
5) கட்டுபாடில்லாத சர்க்கரையால் வரும் நீரழிவு நோய் குணமாக்கும் “அரைக்கீரை.”
6) வாய்ப்புண், குடல்புண்கள் வந்து படாத பாடு படுவோரை குணமாக்கும்
“மணத்தக்காளிகீரை“.
7) நம் ஸ்கின்னை அழகாக மாற்றி உடலை பொன்னிறமாக மாற்றும் “பொன்னாங்கண்ணி கீரை.”
8) மாரடைப்பு வராமல் நம்மை காக்கும் “மாதுளம் பழம்.”
9) அசுத்தமான ரத்தத்தை சுத்தமாகும் “அருகம்புல்.”
10) உயிரை கொல்லும் கான்சர் நோயை குணமாக்கும் ” சீதா பழம்.”
11) மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளி பழம்.அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள்
12) நீரிழிவு நோயை குணமாக்கும் “முள்ளங்கி.”யாய் சாப்பிட்டு பயன் பெறுங்கள்
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட “வெந்தயக் கீரை.”சமைத்து சாப்பிடுங்கள்
14) நீரிழிவு நோயை குணமாக்க ” வில்வம்.“சாப்பிட்டு பாருங்கள்
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “துளசி.”யை தினம் சாப்பிடுங்கள்
16) மார்பு சளி நீங்கும் “சுண்டைக்காய்.”சாப்பிட்டு பயனடையுங்கள்
17) சளி, ஆஸ்துமாவுக்கு “ஆடாதொடை.”நல்ல பலன் தரும்
18) ஞாபகசக்தியை கொடுக்கும் “வல்லாரை கீரை.”
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “பசலைக்கீரை.”யை சமைத்து சாப்பிடுங்கள்
20) ரத்த சோகையை நீக்கும் ” பீட்ரூட்.”சமைத்து அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுங்கள்