மாத விலக்கு காலத்தில் மாடர்ன் பெண்கள் இப்படி இருப்பதால்தான் தாயாக முடியாம தவிக்கிறாங்க

 
mencus problem tips mencus problem tips

பெண்கள் குறிப்பாக வயது வந்த இளம்பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களை சந்தித்துவருகிறார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய், அதிக இரத்த போக்கு, விட்டு விட்டு வரும் மாதவிடாய் என்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைஅதிகளவில் சந்தித்துவருகிறார்கள். இந்த சுழற்சியில் ஏன் மாற்றம்? காரணம் என்ன? அவை உண் டாக்கும் பிரச்சனைகள் என்ன? தீர்வு என்ன அறிந்து கொள்வோம்.

பெண்ணின் உடலானது, கருப்பையைக் கருத்தரிப்பதற்கு ஏதுவாக, “என்டோமெட்ரியம்என்னும் சவ்வை கரைத்து, வளர வைத்து, பக்குவப்படுத்திக் கொள்கிறது.

மாதவிலக்கு ஏற்படும் போது 35-40 மி.லி ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

நீர்ச்சத்து, புரதம், ரத்தம், சளிச்சவ்வு, உப்புகள், எண்டோமெட்டிரிய திசுக்கள் ஆகியன கலந்த கருஞ்சிவப்பு நிற திரவமாக ரத்தம் வெளியேறும்.

மன அமைதியுடன் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3-4 நாட்கள் சீரான ரத்தப்போக்கு ஏற்படும்.

மாதவிலக்கு காலத்தில் ஓய்வெடுத்தால், கர்ப்பப்பை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களும் நன்கு உற்பத்தியாகின்றன.

மாதவிலக்கு காலத்தில் ஓடலாம், குதிக்கலாம், விளையாடலாம், வண்டி ஓட்டலாம் என விளம்பரம் செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்தால் ரத்தப்போக்கில் மாறுதல் ஏற்படுவதுடன், கர்ப்பப்பை தசைகள் திடீர் இறக்கத்தால் வீங்கி, கர்ப்பப்பைப் பெரிதாகின்றன.

இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்

சானிடரி நாப்கின் பயன்படுத்தலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினை செலவு செய்து வாங்குவதை விட பருத்தி துணியை 8-ஆக மடித்து நாப்கின் போல பயன்படுத்துவது நல்லது. இதை சித்த மருத்துவத்தில்பொட்டணம் கட்டுதல்எனச் சொல்வார்கள். தீவிரமான ரத்தப்போக்கை தவிர்க்க, மாசிக்காய், காசுக்கட்டி, கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை இடித்து, பொடித்து துணியில் முடிந்து கர்ப்பப்பை வாசலில் வைக்க ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும் பிறப்புறுப்பில் தோன்றும் அரிப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன நிற்கும்.

மாதவிலக்கான பெண்கள்... செய்ய கூடாதவைசெய்ய வேண்டியவை...

மாதவிலக்கு நாட்களில் தாம்பத்ய உறவு, பகல் தூக்கம், கண்களில் மையிடுதல், வாசனைத் திரவியம் பயன்படுத்துவது, நகம் வெட்டுதல், குதித்தல், ஓடுதல் ஆகியன செய்ய கூடாது. மாதவிலக்கான நாட்களில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்தால், ரத்தப்போக்கு நின்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், மாதவிலக்குக்கு பின் 4-ம் நாளில் இளஞ்சூடான வெந்நீரில் தலைக்கு குளிப்பது நல்லது.

மாதவிலக்கான பெண்கள் என்ன சாப்பிடலாம்?

மாதவிலக்கான நாட்களில் பெண்களுக்கு கொழுப்பும், புரதமும் தேவையான அளவு கிடைத்திட வேண்டும்.

கருப்பு உளுந்தைப் பொடித்து மாவாக்கி, களிபோல் கிண்டி, தேவையான நல்லெண்ணெய் சேர்த்து, இளஞ்சூடாக 4-5 உருண்டைகளாக பெண்கள் சாப்பிட வேண்டும். இதனால் விட்டமின் கிடைக்கும். அமினோ அமிலங்களும் கிடைப்பதால், இடுப்பு எலும்புகள் பலம் பெறும்.

அரைக்கீரை விதைகளைப் பொடித்து, 1-2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, நல்லென்ணெயுடன் குழைத்து சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும்.

பெண்களே மாதவிலக்கின் போது குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும். பிரயாணம் செய்தல், படி ஏறி இறங்குதல் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சீரான ரத்தப்போக்கு, சீரான மாதாந்திர சுழற்சி, ஆரோக்கியமான கர்ப்பப்பை, இயற்கையான முறையிலே கருத்தரித்தல், சுகப்பிரசவம், பிரச்னை இல்லாத மெனோபாஸ் இப்படி அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்றால் மாதவிலக்காகும் 4 நாட்களில் 18 மணி நேரம் ஓய்வெடுத்தாலே இவையெல்லாம் சரியாக நடக்கும்

சிறுவயதிலேயே பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி குறித்த நாட்களில் வராது. இவை இயல்பானது என்பதால் பயப்படதேவையில்லை. பொதுவாக இந்த வயது சிறு பெண்களுக்கு 30 நாட் களிலிருந்து 40 நாட்களுக்கு ஒருமுறை கூட சுழற்சி உண்டாவதுண்டு. இவர்கள் வளர்ந்த பிறகு 20 வயதை கடந்த பிறகு மாதவிடாய் சுழற்சியில் சீரான மாற்றம் உண்டாகி மாதவிடாய் சைக்கிள் முறையாக வரத்தொடங்கும்.