சிவக்க வைக்கும் மருதாணியின் மலைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்
சித்த மருத்துவத்தில் பெரும்பாலான வைத்திய முறைகள் மூலிகைகளை அதிகம் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மனிதர்களின் நோய்களை தீர்க்கும் பல அபூர்வ வகையான மூலிகைகள் அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. ஆனால் நாம் வசிக்கும் கிராம, நகர்ப்புற பகுதிகளில் நாம் வளர்க்கும் செடி வகைகளில் சில மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “மருதாணி” என்றாலே அனைவரும் அறிந்திருப்பது மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைத்துக்கொண்டால் சிவந்த சாயம் கைகளில் ஏற்படும் என்பது தான். மருதாணி இலைகளுக்கு இருக்கும் வேறு பல மருத்துவ குணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மருதானியின் பயன்கள்
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்க.
மருதாணி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
உடல் சூட்டை குறைக்கும்
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள்,வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.
தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
தீக்காயம்
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
வலி நிவாரணி
மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
தூக்கமின்மை
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.


