மரிக்கொழுந்தில் மறைந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 
marikozhundhu

"மதுரை மரிக்கொழுந்து வாசம் ,என் ராசாத்தி என்னோட நேசம்" -என்று சினிமாவில் ஒரு பாட்டு உள்ளது .இந்த பாடலின் வரிகள் போல இந்த மரி கொழுந்தில் நிறைய நன்மைகள் நம் தோலுக்கும் ,உடலுக்கும் உள்ளது .இதன் மூலம் வயிற்று வலி ,மற்றும் சொரியாஸில் போன்ற தோல் நோய்களை குணப்படுத்தலாம் .

மேலும் உடலில் விட்டு விட்டு வரும் வலி முதல் ,மூட்டு வலி வரை குணப்படுத்தலாம் .மேலும் இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து ,உடலில் ஏற்படும் வீக்கம் குறைகிறது

தோல் நோய்களுக்கு மருந்தாகும் ...

மேலும் ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை போக்குகிறது, மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கும் வழியை பார்க்கலாம்

1. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும்.

2.தேங்காய் எண்ணெயுடன்  நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது.

அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது இந்த மரிக்கொழுந்து