கருஞ்சீரக பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் எந்த நோய் பொடி பொடியாகும் தெரியுமா ?

 
karunseeragam

யுனானி மருத்துவம் முதல் சித்த மருத்துவம் வரை பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது கருஞ்சீரகம் .இதைப்பற்றி நபிகள் நாயகம் கூட இறப்பை தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத்த கூடியது கருஞ் ஜீரகம் என்று குறிப்பிட்டுள்ளார் .இதய நோய் முதல் புற்று நோய்கள் வரை குணப்படுத்தவும் ,அது மனிதனை தாக்காமலும் காக்கும் பவர் கொண்டது இது .இதில் உள்ள தாய்மொகுயினன் என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலுமில்லை .அதனால் இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் .அதனால் அரபு நாட்டில் உள்ள அனைத்து உணவுகள் மருந்துகள் போன்றவற்றில் இதை சேர்த்து வருகின்றனர்

Karunjeeragam Benefits (Tamil) | கருஞ்சீரகம் ...

கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. சிலருக்கு வயிற்றில் உப்பிசம் ஏற்படும் .அதனால் அந்த உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை கருஞ்சீரகம் போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கி பல நன்மை செய்ய கூடியது இந்த பொருள்

சிலருக்கு இருக்கும் கிட்னி கல் பிரச்சினையில் அவர் அவதி படுவர் .அந்த பிரச்சினைக்கு  கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது .