சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது இந்த மூலிகை
பொதுவாக நம் முன்னோர் இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்ததால் எந்த நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ்நதனர் ,ஆனால் நாம் இயற்கையை விட்டு விலகி செயற்கையுடன் வாழ்ந்ததால் பல நோய்களுக்கு ஆட்பட்டு வருகிரோம் .அந்த வகையில் இயற்கையில் கிடைக்கும் சிறுகண் பீளை என்ற பூ மற்றும் வேர் மூலம் எந்த நோய்களை தீர்க்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.பலராலும் பொங்கல் பூ என அறியப்படும் சிறுகண் பீளையின் அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணங்களை கொண்டது.
2.நீர்நிலை பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடிய இம்மூலிகையின் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
3.சிறுகண் பீளை பூக்கள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து ,
4.சிறுகண் பீளையின் கஷாயம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் .இதன் வேரை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும், வேர் இல்லாமல் கசாயம் தயாரிக்க வேண்டாம்.
5.அடுத்ததாக இந்த வேருடன் பூக்களை சேர்த்து அரைக்கவும் . இது இரண்டையும் அரைக்கும் பொழுதே சிறிதளவு நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளவும்.
6.கடைசியாக இந்த கலவையுடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும், இவற்றை நன்றாக மைய அரைத்த பின்னர் வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
7.இந்த சிறுகண் பீளை கஷாயத்தை ஒருநாளைக்கு 50 முதல் 100 மில்லி லிட்டர் வரை அருந்தலாம்,
8.கடுமையான வலியால் அவதிப்படும் நபர்கள் 15 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
9.அவ்வப்போது வலியால் அவதிப்படும் நபர்கள் வாரம் இருமுறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
10.உடலில் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது சிறுகண் பீளை.


