ரத்த சோகை வராமல் தடுக்க உதவும் இந்த பழம்
![ulcer health tips](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ec4b54f74db739c87e7fb8a05906656b.jpg)
பொதுவாக சீதாப்பழம் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கியம் உண்டு .இதில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1.பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று சீதாப்பழம்.
2.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
3.இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது அதனை குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.
4.சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
5.இது மட்டும் இல்லாமல் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் இதை ஆரோக்கியத்திற்கும் சீதாப்பழம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
6.மேலும் ஹீமோகுளோபின் குறைபாடல் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தை உற்பத்தி செய்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.
7.குறிப்பாக செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
8.எனவே பல்வேறு ஆரோக்கியமும் நிறைந்த சீதாப்பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.