பிரண்டை துவையல் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக பிரண்டை தண்டுகளை அடிக்கடி துவையல் செய்து சாப்பிடுவோருக்கு இதய பகுதியில் ஏற்படும் அடைப்பை சரி செய்யலாம் .மேலும் இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் கழுத்து ,இடுப்பு போன்ற இடத்தில் நீர் தங்கி பலருக்கு வலி இருந்து கொண்டேயிருக்கும் .இந்த வலியை இந்த துவையல் மூலம் குணப்படுத்தலாம்
2.சிலருக்கு வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு ரொம்ப தொல்லை கொடுக்கும் .இப்படி அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கி நம் ஆரோக்கியம் சிறக்கும் .

3.மேலும் இந்த துவையல் குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்தி நம் உடலில் வலிமையை உண்டு பண்ணும் .
4.சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்படுபடுவார்கள் .இப்படி அவதிப்படுவோர் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூட வைத்து நன்றாக குணப்படுத்தி விடும்
5.சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகம் ஏற்படும் ,இன்னும் சில பெண்களுக்கு அடி முதுகு பகுதி வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்பட்டு இன்னல் படுவர் .
6.இப்படியான காலங்களில் பிரண்டை தண்டுகளை துவையல், சட்னி, ரசம் போன்ற எந்த பக்குவத்திலாவது செய்து சாப்பிட்டு வந்தால் இந்த கோளாறுகள் எல்லாம் சரியாகிவிடும் .


