கொத்தமல்லி இலையுடன் தேன் சேர்த்து பூசிவந்தால் எந்த நோய் ஓடிப்போயிடும் தெரியுமா?

பொதுவாக காய் கடையில் கொசுறாக இலவசமாக கொடுக்கப்படும் கொத்தமல்லி இலையில் விலை மதிப்பற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது ..இந்த இலையின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த இலையின் நீரை கண்ணில் விட்டால் கண் நோய்கள் பறந்து ஓடி விடும் .
2.சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும் ,இதற்கு இந்த இலையுடன் கற்பூரம் சேர்த்து பத்து போட்டால் குணமாகிவிடும் .
3.சிலருக்கு தோலில் அரிப்பு ,தடிப்பு போன்றவை ஏற்படும் .இதற்கு இந்த இலையுடன் தேன் சேர்த்து மேல் பூசிவந்தால் இந்த நோய் ஓடி விடும் .
4.கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் வாந்தி, தலைசுற்றல் மற்றும் உடல்சோர்வு ஏற்படுவது இயல்புதான்.
5.எனினும், இந்த சமயங்களில், தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து, கொதிக்கவைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதை குடித்து வந்தால் தலைச்சுற்றல், வாந்தியும் நீங்கும்.
6.கொத்தமல்லி இலைகளில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் செப்டிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி நன்றாக செயல்படுகிறது.