சாப்பிட்டதும் சுடுநீர் குடிப்பதால் உடல் பெறும் நன்மைகள்

 
hot water

மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது நல்லது என்கின்றனர். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும்.

தண்ணீர் அருந்தும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என பிளாஸ்டிக் குடங்களை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான முறையில் தண்ணீர் அருந்த முணைகின்றனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது நல்லது என்கின்றனர். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும். 

முதல் விஷயம் நாம் குடிக்கும் நீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் அதிகமாக சுடு தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர். இந்த பழக்கத்தை எல்லா நேரங்களிலும் செய்வது இன்னும் நல்லது. இதனால் நீர் வழியாக பரவும் எந்த கிருமிகளும் நம்மை தாக்காது. எனவே குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீட்டில் இதை கடைபிடிப்பது நல்லது.

 தண்ணீர் அருந்தும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என பிளாஸ்டிக் குடங்களை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான முறையில் தண்ணீர் அருந்த முணைகின்றனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது நல்லது என்கின்றனர். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும். அவை என்னென்ன பார்க்கலாம்.

உணவு சாப்பிட்டு 15 அல்லது 20 நிமிடம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சூடான தண்ணீர் குடிப்பதனால் புற்று நோயைத் தடுக்கலாம்.

உணவு விரைவாக செரிமானம் ஆக சுடு தண்ணீர் குடிப்பது நல்லது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்க சுடு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீரை குடித்தால் உணவில் உள்ள எண்ணெய் துகள்கள் கெட்டியாகி சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதில் பிரச்சனையை ஏற்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் அதிகரிக்கும். எனவே, உணவு உண்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பது நல்லது