இரவில் வெந்நீரில் தேன் கலந்து குடிக்க எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?
பொதுவாக சிறப்புகள் கொண்ட தேனை வெறும் வயிற்றில் வெந்நீருடன் உட்கொண்டாலே சளி ,காய்ச்சல் .தொண்டை புண் ,வாயு தொல்லை போன்ற நோய்கள் ஓடிவிடும் .தேனின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் தேன் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .
2.இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ,நம்மை பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது

3.வெதுவெதுப்பான நீருடன் தேனை கலந்து குடிப்பதற்கான சிறந்த நேரம் காலை வெறும் வயிறு என்று கூறுகின்றனர்
4. பொதுவாக காலை வேலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நன்மை பயக்கும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
5.காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் ,
6.வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது எடை இழப்புக்கு உதவவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
7காலை நேரம் தவிர இரவில் தூங்கபோவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நல்லது.
8.இரவில் வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது தொண்டைக்கு இதமளிக்கவும், தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

