பூண்டு தண்ணீர் மூலம் எந்தெந்த நோய்களை வெல்லலாம் தெரியுமா ?
பொதுவாக பூண்டு நம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் .இந்த ஆரோக்கியம் மிகுந்த பூண்டின் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த பூண்டு வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட வயிறு பிரச்சினை ,கல்லீரல் பிரச்சினை ,ஆஸ்த்மா ,இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் .
2.மேலும் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் இந்த பூண்டு மூலம் குணமாகும் .

3.பூண்டை பின்வருமாறு சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
4.முதலில் மூன்று பூண்டு பற்களை நசுக்கி கொள்ளுங்கள் .பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள் ,
5.பின்னர் இந்த பூண்டை சேர்த்து அந்த தண்ணீரில் கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அந்த பூண்டு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
6.இப்படி பூண்டு தண்ணீரை குடிக்க செய்தால் சளி, இருமல் போன்ற தொற்றுகள் குறையும் என்று கூறப்படுகிறது.
7.இந்த பூண்டு தண்ணீர் உடல் கொழுப்பை எரிக்கிறது,
8.இந்த பூண்டு தண்ணீர் எடையை குறைக்கிறது மற்றும் இரத்த விநியோகத்தை மேம்படுத்துகிறது என தெரிய வந்துள்ளது.
9.இந்த பூண்டு தண்ணீர் மூலம் உயர் இரத்த அழுத்தமும் குறையும் என்று கூறப்படுகிறது.


