தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் எந்த நோயெல்லாம் ஓடும் தெரியுமா ?

 
tulsi

பொதுவாக துளசி செடியில் நம் உடலுக்கும் குடலுக்கும் ஏராளமான நன்மைகள் ஒளிந்துள்ளது

 நம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அதன் ஆரோக்கிய நன்மைகளை அளவிட முடியாது .உதாரணமாக சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.மேலும் துளசியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் .

1.பொதுவாக துளசிச் செடியை  தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வரவே வராது.

sweet tulsi

2.ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். துளசி இலை மூலம் வாய் துர்நாற்றத்தையும் போக்கலாம் .

3.நம் உடலில் பல கிருமிகள் இருக்கும் .நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

4.சிலருக்கு சுகர் இருக்கும் .துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

5.துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.

6.தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மேலும் துளசி மூலம் மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

7.மேலும் துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

8.சிலரின் உடலில் துர் நாற்றம் இருக்கும் .உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

9.சிலரின் உடலில் படை சொறி இருக்கும் .தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

10.மேலும் துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.