திரிபலா சூரணத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்க எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா?

 
turmeric

பொதுவாக சிலருக்கு  தொண்டையில் ஊசி வைத்து குத்துவது போல் வலிக்கும் . .ஆனால் இயற்கை மருத்துவத்தில் இதை எளிதான முறையில் குணப்படுத்தலாம் .இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்  
1 : தொண்டை வலியால் எதையும் விழுங்க முடியாமல் அவதிப்படுவோர் ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 ஆகியவற்றை  தண்ணீரில்  நன்கு கொதிக்க விட வேண்டும்.
2.பிறகு அந்த கொதித்த நீரைகுடித்து வந்தால் தொண்டை வலி மாயமாய் மறைந்தே போகும்

throat
3 : தொண்டை வலியால் பேசவே சிரமப்படுவோர் 2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம் சேர்த்து , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
4.பிறகு கொதித்த நீரை தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்து  வந்தால்  தொண்டை வலி நீங்கி நன்றாக பேச முடியும் .
5 : நாள் பட்ட தொண்டை வலி எளிதில் குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும்
6.அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறி விடும் .