மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை உணவுடன் எடுத்துக் கொள்ள நோய் தீரும்

பொதுவாக கீரை வகைகளை உணவில் தினம் சேர்த்து கொள்வோருக்கு பல நன்மைகள் உண்டு .அந்த வகையில் தண்டு கீரையை உணவில் சேர்த்து கொண்டால் பல நோய்கள் வரும் முன் காக்கலாம் .அதனால் இப்பதிவில் தண்டுகீரையின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.கண்ட நேரத்தில் சாப்பிடுவதாலும் ,கார உணவுகளை எடுத்து கொள்வதாலும் அல்சர் உண்டாகிறது ,அதனால் அவர்கள் இந்த கீரையை தங்களின் உணவில் சேது கொண்டால் அல்சர் குணமாகும் ,
2.மேலும் கல்லீரல் பாதிக்கப்படாமலிருக்க இந்த கீரையை சேர்த்து கொள்ளலாம் ,மேலும் கிட்னி கல் ,மலசிக்கல் ,புற்று நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
3. குடல் புண், போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்கள் தண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
4. கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைக்கும் தன்மை தண்டுக்கீரைக்கு உண்டு.
5. தண்டுகீரை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது. உடல் உஷ்ணத்தால் பாதிக்கபட்டவர்கள் இந்த கீரையை உணவில் எடுத்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
6. தண்டுக்கீரையில் இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் அதிகமாக காணப்படுகிறது.
7. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
8. தண்டுகீரையை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்து கொண்டால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.