செம்பருத்தி எண்ணெய்க்கு எந்த நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது தெரியுமா ?

பொதுவாக தலை முடி பிரச்சினைக்கு செம்பருத்தி நல்ல பலனை கொடுக்கும் .இந்த செம்பருத்தி மூலம் செம்பருத்தி எண்ணெய் தயாரித்து அதை முடியில் பூசி வந்தால் எண்ணற்ற பலனை நாம் பெறலாம் .இந்த பதிவில் இந்த செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்று நாம் பார்க்கலாம்
1.அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. 2.: 2.செம்பருத்தி எண்ணெய் தயாரிக்க செம்பருத்தி பூ – 10, தேங்காய் எண்ணெய் – 250 கிராம், வெந்தயம் – 1 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
3.செம்பருத்தி எண்ணெய் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
4.இந்த செம்பருத்தி எண்ணெய்யை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
5. இந்த செம்பருத்தி எண்ணெயில் உள்ள செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும். முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
6.செம்பருத்தி எண்ணெய் பொடுகை போக்க மிகவும் சிறந்தது.
7.செம்பருத்தி எண்ணெய் நரைமுடியை போக்கும். தலை அரிப்பை தடுக்கும்.
8.குளிக்க செல்லும் முன், இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
9.உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும்.
10.வாரம் ஒரு முறை இந்த செம்பருத்தி எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்