பெண்கள் செம்பருத்திப் பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
sembaruthi tea health tips

பொதுவாக செம்பருத்தி மலரை உண்டுவந்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டு .அந்த வகையில் செம்பருத்தி மூலம் நம் உடல் அடையும் மருத்துவ பலனை இந்த பதிவில் காணலாம்

1.ஐந்து செம்பருத்திப் பூவை, ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்த நிறைய பலன் உள்ளது .

Buttermilk

2.செம்பருத்தி பூவினால்  உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

3.செம்பருத்தி பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும்.

4.இதுபோன்று நாற்பது நாட்கள் செம்பருத்தியை அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

5.செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

6.செம்பருத்திப் பூவுடன் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

7.இந்த செம்பருத்தி சாறை காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

8.பெண்கள் செம்பருத்தி மலரை உண்டுவந்தால் வெள்ளை, வெட்டை, இரத்தக்குறைவு, பலவீனம், மூட்டு வலி, 9.செம்பருத்தி மலரை உண்டுவந்தால் இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன்

கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

10.செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.