வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 
prokkoli

பொதுவாக நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் கே அதிகளவு தேவைப்படுகிறது. வயதான காலங்களில் வைட்டமின் கே சத்து குறைவாக இருந்தால் எலும்பு பிரச்சனை ஏற்படும். மேலும் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த பிரச்சனைகளை ப்ரோக்கோலி சாப்பிடுவதன் மூலம் நாம் எப்படி தீர்க்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்

1.ப்ரோக்கோலியை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் புத்துணர்ச்சி, இளமை தோற்றம் ஆகியவற்றை ப்ரோக்கோலியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்கள் நமக்கு தருகிறது.

2.மேலும் ப்ரோக்கோலி தோல் சுருக்கங்களை தடுக்கிறது.

3.ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது.

4.மேலும் ப்ரோக்கோலிஅதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.

5.ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது.

stomach

6.வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

7.சூரியனிடம் மிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை தருகிறது. அதனால் தோல் புற்றுநோய் மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.

8.ப்ரோக்கோலியில் வைட்டமின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

9.எனவே எலும்பு வலுவடைவதற்கு ஒரே உணவு ப்ராக்கோலி மட்டும் தான். அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது ப்ராக்கோலி சாப்பிட வேண்டும்.