பீட்ரூட் ஜூசை காலையில் தினமும் அருந்துபவர்களுக்கு நேரும் நன்மை
![beet root](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f70c078345708140eb54cacafadaa0ea.jpg)
பொதுவாக பீட் ரூட் ஜூஸ் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதை அதிகம் சாப்பிடுவதால் வயதான காலத்தில் வரும் அல்சைமர் மற்றும் அறிவுத்திறன் வீழ்ச்சி போன்ற பாதிப்புகளால் நாம் நொந்து போகாமலே காக்கப்படலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு
2.ஒரு மனிதனின் உடலின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது.
3.பீட்ரூட் ஜூசை அருந்துவதால் சிறுநீரகங்களுக்கு நல்ல பலத்தை கொடுத்து ,யூரின் ஒழுங்காக போவதற்கு பெரிதும் உதவுகிறது
4.ஒரு சிலருக்கு எந்த பணிகளை செய்தாலும் சுலபத்தில் உடல் சோர்ந்து விடுகிறது.
5.பீட்ரூட் ஜூசை காலையில் தினமும் அருந்துபவர்களுக்கு ஸ்டமினா எனப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு உடலில் பலம் ஏற்பட்டு நம்மை ஆரோக்கியமாய் வைக்கிறது . .
6.ஒரு மனிதனின் உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும்.
7.தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூசை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் நம் லிவர் காலம் நாம் வாழும் முழுவதும் காக்கப்படும்