தேனில் வெங்காயத்தை ஊறவைத்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில் தேனுக்கும் வெங்காயத்துக்கும் தனியிடமுண்டு .குறிப்பாக தேன் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம் .அது போல வெங்காயம் மூலமும் பல்வேறு நோய்களை எப்படி சாப்பிட்டால் குணமாகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப்-ஐ குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் .
2.வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவ உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது
3.வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதை தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்குமென்று சாப்பிட நம் ஆரோக்கியம் சிறக்கும்
4.வெங்காயத்தின் முழு பலனும் கிடைக்க ஒரு கப்பில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
5.மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை குடித்து வந்தால் , இது காய்ச்சலை போக்கும்.தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.
6.இந்த வெங்காய சிரப் கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும்.
7.இந்த வெங்காய சிரப்ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.
8.வெங்காய சிரப் இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சிரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.
9.சளித்தொல்லைஇருந்தால் முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும்.
10. இந்த ஆரோக்கியம் தரும் வெங்காய சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.