நாவல் பழங்களை உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த நோயெல்லாம் குறையும் தெரியுமா ?

 
naval fruit

பொதுவாக நாவல் மரத்தின் பழம்  மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஆரோக்கியம் சிறக்கும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.நாவல் பழம் மூலம் சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.பற்களின் ஈறுகளை இது பலப்படுத்தி பற்களை பாதுகாக்கும் ஆற்றல் படைத்தது
2.சில திருமணமான பல பெண்களுக்கு கருப்பையில் சினைமுட்டைகள் வளர்ச்சிபெறாமல் இருப்பது, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவற்றின் காரணமாக மலட்டுத்தன்மை உண்டாகிகர்ப்பம் தரிக்க முடியாமல் அவதி படுகின்றனர் .
3.அவர்கள் நாவல் பழங்களை பழமாகவோ அல்லது ஜூஸ் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுதன்மை தீர்ந்து கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் வரும் .
4.ஆஸ்துமா எனப்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்பட்டு சுவாசிக்க சிரம படுவர் .

asthma
5.மேலும் சிலருக்கு ஜுரம் ஏற்படுவதால்வறட்டு இருமல் ஏற்படுகிறது.
6.அந்த நபர்கள் நாவல் பழங்களை தினமும் காலை வேளையில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறையும்,
7.ஜுரத்தினால் ஏற்பட்டிருக்கும் வறட்டு இருமலையும் போக்கி சுவாச பிரச்சனைகள் இல்லாமல் செய்யும் இந்த நாவல் பழம்