குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக எலுமிச்சை பழமானது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் .உதாரணமாக
கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.இந்த பதிவில் எலுமிச்சை பழமானது நமக்கு தரும் நன்மைகள் குறித்து நாம் பாக்கலாம்
1.பொதுவாக எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது.
2.எலுமிச்சையின் நறுமணம் சுவாசத்துடன் உள்ளே செல்வதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
3.சிலவகை நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்கும் .
4.எலுமிச்சை பழத்தின் நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.
5.எலுமிச்சை பழம் மூலம் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது.
6.எலுமிச்சை, நோய்த்தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. இதை படுக்கை அறையில் வைப்பதால், கிருமிகள் அழிகிறது.
7. குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் உடல் குளிர்ச்சி ஆவதுடன், தோல் நோயும் ஏற்படாது.
8.எலுமிச்சை பழத்தின் நீரை பருகினால், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
9.நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
10.எலுமிச்சை தோலை வைத்து முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், முழுமையாக சுத்தத்தை தருகிறது.