வாரத்திற்கு இரண்டு முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தால் நம் உடலில் நேரும் அதிசயம்

 
koththamalli koththamalli

பொதுவாக சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.எனவே இந்த பதிவில் கொத்தமல்லி இலை மூலம் நம் உடல் கொழுப்பு முதல் பல்வேறு நோய்களை எப்படி குணமாக்கலாம் என்று நாம் காணலாம்

1.கொத்தமல்லி இலையில் பல்வேறு அமிலம் நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

2.சிலருக்கு கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.

liver

3.வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும்  கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம்  குணமாகிறது.

4.மாரடைப்பு வராமலும்  ,இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.

5.கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.

6. கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் , ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

7.கொத்தமல்லி இலைகள் கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் , கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.

8.சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் 

9.இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல் குணமாகும்

10.இந்த நீரின்  மூலம் கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.