சளி தொல்லைக்கு நீராவி பிடிக்கும் முறை
பொதுவாக சளி தொல்லை சிலரை பாடாய் படுத்திவிடும் .இந்த சளி தொல்லையை ஒழிக்கஒவ்வொருவரும் ஒவ்வொரு சிகிச்சை முறையினை செய்து வருகின்றனர் .அந்த வகையில் சளி தொல்லைக்கு நீராவி பிடிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பலர் சளி மற்றும் தலை பாரம் மற்றும் தொண்டை வலிக்கு நீராவியை சுவாசித்து (ஆவி பிடித்தல்) வருகின்றனர்.
2.இந்த நீராவி பிடிப்பதை சரியான முறையில் செய்யாததால், பதற்றத்துடன் செய்வதாலும் வெந்நீர் ஊற்றி விபத்துகள் நேர்கின்றன.
3.ஆவி பிடிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை: வெந்நீர் பாத்திரத்தில் நிரம்பி வழியுமளவுக்கு இருக்கக்கூடாது
4.ஆவி பிடிக்கும்போது குழந்தைகள் மிக அருகில் செல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.
5.ஆவி பிடிக்க அமரும்போது மடியில் ஒரு துண்டை (டவல்)வைத்துக்கொள்ள வேண்டும்.
6.வெந்நீரை இறக்கி வைத்ததும் அதிலிருந்து நீராவி சமச்சீரான அளவாக வெளியேறும் வரை காத்திருக்கவும். 7.நீராவி வெளியேறுவது சீரானதும் போதுமான தூரத்தில் முகத்தை வைத்து நீராவியை உள்ளிழுத்தால் ஆரோக்கியம் பெறலாம்
8.சிலர் ஆவி பிடிக்கும்போது சளி தொல்லையை ஒழிக்க ஓமத்தை வெந்நீருக்குள் போடுகின்றனர்.
9.வேறு சிலர் ஆவி பிடிக்கும்போது சளியை ஒழிக்க யூகலிப்டஸ் தைலத்தை பயன்படுத்துகின்றனர். எச்சரிக்கையுடன் இதை செய்து பயன் பெறலாம்.


