பெண்கள் கருச்சிதைவு ஆகாமல் தாய்மை அடைவது எப்படி ?

பொதுவாக சிலருக்கு அதிக வயது காரணமாகவும் ,சிலருக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் காரணமாகவும் ,இன்னும் சிலருக்கு குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாக கூடும்.இந்த கருசிதைவுக்கான காரணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சில சமயங்களில் காரணங்கள் இல்லாமலும் கருச்சிதைவு ஏற்படலாம். இதனால் உங்களை நீங்கள் குறை கூற தேவையில்லை.
2.கருச்சிதைவு ஏற்படும் பட்சத்தில் முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஆண் பெண் இருவரின் மருத்துவ விவரமும் முழுமையாக ஆராயப்படவேண்டும்.
3.கர்ப்பமாகும் பெண்ணிற்கு சர்க்கரை, மன அழுத்தம், தைராய்டு போன்ற நோய்கள் இருப்பின் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கர்ப்பத்திற்கு திட்டமிட வேண்டும்.
4.லேப்ராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி மூலம் கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் கர்ப்பப்பையின் புண்கள் அல்லது ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கண்டறியப்பட வேண்டும்.
5.கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் உடல் எடை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
6.கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்ணின் சரியான வயதில் குழந்தைக்கு திட்டமிட வேண்டும். புகைப்பிடித்தல், போதைப் பழக்கம், மது அருந்துவது போன்றவற்றை நிறுத்திய பிறகே கர்ப்பத்திற்கு திட்டமிட வேண்டும்
7.கருச்சிதைவுக்கு பின்னர் கர்ப்பிணியாகும் பெண்கள் தங்களை வருத்திக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.