ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் இந்த நீர்
![aththi](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/55b2103b11bee759f7a680fd55381d2a.jpg)
பொதுவாக அத்திப்பழம் நீரில் நிறைய மருத்துவ குணம் உள்ளது .எனவே இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1.பொதுவாகவே உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் பல்வேறு டயட்களையும் உடற்பயிற்சிகளையும் செய்து வருவது மட்டுமல்லாமல் உணவிலும் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
2.அப்படி முக்கியமாக உடல் எடையை குறைக்க பயன்படுவது தான் அத்திப்பழ நீர்.
3.அத்திப்பழங்கள் மூன்று எடுத்து இரவில் ஊற வைத்து பிறகு காலையில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைய வாய்ப்பு அதிகம்.
4.இது மட்டும் இல்லாமல் இருமல் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கும் இது ஒரு மருந்தாக இருக்கிறது.
5.இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
6.எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த அத்திப்பழ தண்ணீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்