தேன் மற்றும் பூண்டு கலவையை கிராம்பு எண்ணெய்யுடன் சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
honey

பொதுவாக நம் உடலுக்கு கிராம்பு பல நன்மைகளை அளிக்கிறது .உதாரணமாக கிராம்பு பல்வலி முதல் பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது .மேலும் இந்த பதிவில் நாம் கிராம்பு மூலம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம்

1.கிராம்பு இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் 

health tips of cloves in hot water

2.கிராம்பு ஒரு எதிர்ப்பு அழற்சி விளைவைக் கொண்டிருக்கிறது. இது சளி மற்றும் இருமலைக் குறைக்கும். இது வாயிலிருந்து முழு சளியையும் அகற்றி மேல் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது .

3.கிராம்பு  மூலம் கிராம்பு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

4.கிராம்பு எண்ணெய் மூலம் குளுக்கோஸைக் குறைக்கவும், லிப்பிட் அளவு மேம்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளை சிறுநீரக பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கவும் முடியும்.

5.கிராம்பு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்கும் கிராம்பு எடையைக் கட்டுப்படுத்த உதவும்.

6.கிராம்பு வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, இது பல்வலியை நீக்கும். கூடுதலாக, கிராம்பு எண்ணெய் பல் மற்றும் தலைவலியைக் குறைக்கவும் உதவுகிறது.

7.கிராம்பு எண்ணெயை பற்களில் தடவுவதன் மூலமும் கிராம்பு மற்றும் அதன் எண்ணெயைப் பருகுவதன் மூலமும் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

8.கிராம்பு எண்ணெயின் நறுமணம் நம் நாசி பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது ஆஸ்துமா, இருமல், சளி, சைனஸ், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சினைகளை அமைதிப்படுத்தும்.

9.தேன் மற்றும் பூண்டு கலவையை கிராம்பு மற்றும் அதன் எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

10. கால் டீஸ்பூன் கிராம்புப் பொடியை ஒரு கப் சூடான நீரில் கலந்து காலையிலும் இரவிலும் குடிக்க பல நன்மைகளை நாம் பெறலாம் .