நீண்ட நேரம் செல்போனுடன் டாய்லெட்டில் இருந்தால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

பொதுவாக பலர் டாய்லெட் சென்றதும் தாங்கள் வந்த வேலையை விடுத்து போனையே பார்த்து கொண்டிருப்பார்கள் .அப்போது டாய்லெட்டில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாஎடுத்துக்கொள்வதால் க்டீரியாக்கள் அவர்கள் கொண்டு வந்த செல்போன் மீது படிந்து விடும் ,இதன் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.என்னதான் சோப்பு போட்டு நாம் கைகளை கழுவினாலும் செல்போனில் இருக்கும் பாக்டீரியாக்கள் நம்முடனே வரும் ,
2.நாம் போனை யூஸ் பண்ணிவிட்டு அந்த கைகளால் சாப்பிடும்போது நம் உடலுக்குள் சென்று நம் உடலுக்கு தீங்கு உண்டாக்கும் .
3.மேலும் நாம் நீண்ட நேரம் டாய்லெட் போக எடுத்துகொல்வதால் பெருங்குடல் நரம்புகள் அழுத்தப்பட்டு பலவிதமான நோய்களுக்கு அது வழி வகுக்கும் .மேலும் என்னென்னெ தீமைகள் வரும் என்று பார்க்கலாம்
4.10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் செலவிடக்கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
5.கழிவறையில் உட்கார்ந்து செல்போனை பார்ப்பது, கேம்களை விளையாடுவது, பேப்பர் படிப்பது போன்ற பழக்கங்கள் பலரிடம் அதிகரித்து வருகின்றது
6.கழிவறையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் ஏற்பட காரணமாக அமையும்.
7.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து கொண்டிருப்பது ஆசனவாயில் வலி, வீக்கம் அல்லது ரத்தப்போக்கு ஆசன வாயில் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.