எந்தெந்த உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா ?

பொதுவாக மதுவை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல்நலம் கெட்டு விடும்.இது போல் எந்த உணவுகளை வெரும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.அடுத்து காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், அல்சரை உண்டாக்கி வயிற்றுக்கு கேடு உண்டாகும் .
2.காபி மற்றும் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்காமல், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் ஏற்படுத்தி கொண்டால் வயிறு கெடாமல் பாதுகாக்கலாம் .
3.வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
4.எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் உணவு உண்டபின்னர் சாப்பிடுதல் நலம் .
5.அதுபோல சோடா ,தக்காளி ,மாத்திரைகள் போன்றவற்றையும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது
6.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான ஜீரண அமிலங்களை சுரக்கசெய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திநம் ஆரோக்கியத்தை பாழாக்கி விடும் .