இதயம் வலுப்பெற தினம் எந்த உணவை சேர்த்துக்கணும் தெரியுமா ?
பொதுவாக தயிரில் நம் உடலுக்கும் குடலுக்கும் பல நன்மைகள் உண்டு .உதாரணமாக
சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் உள்ள கால்சியம் சத்தானது இதனை சரி செய்கிறது.மேலும் தயிர் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்
1.தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
2.பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது.
3.தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது.
4.தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.
5.தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும். 6.தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
7.நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.
8.பாலை தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
9.தயிரில் உள்ள பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உணவுடன் சேர்த்து தயிர் சாப்பிடும் போது 97% உணவானது உடனே ஜீரணிக்கப்படும்.
10.கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும்.

