தினம் அரை க்ளாஸ் தேங்காய் தண்ணீர் குடிச்சா ,அலறியடித்து ஓடும் நோய்கள்

 
coconut oil

ஒவ்வொரு நாளும்  காலையில் தேங்காய் தண்ணீரைக் குடீப்பதால், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் அண்டாமல் உடல் பாதுகாக்கப்படும் . இதனால், சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமலை உண்டாக்கும் வைரஸ்களை அழித்து அவற்றை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் உடையது தேங்காய் தண்ணீர்

coconut

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும் .

பசி&வாய்வு தொல்லை

தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும், எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுத்து நம்மை பாதுகாக்கும்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் உடலில் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்

தைராய்டு&பிளட் ப்ரெஷர்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மாத்திரை சாப்பிட்டு வருவார்கள் .அதனுடன் அவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி ,தைராய்டு அளவு குறைந்து விடும் .

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைந்து ,இதயம் பாதுகாக்கப்படும்