தக்காளி பழச்சாறை தொடர்ந்து நாம் குடித்து வரும் பொழுது என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக தக்காளிக்குள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த தக்காளியை ஜூஸ் செய்து அப்படியே குடித்தால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் ,அந்த வகையில் இந்த பதிவில் தக்காளி ஜூஸ் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.தக்காளி ஜூஸ் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி நம்மை கேன்சரிலிருந்து காக்கிறது .
2.மேலும் ஆரோக்கியமான தக்காளி ஜூஸில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளது.
3.தக்காளி ஜூஸ் நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
4.தக்காளி ஜூஸ் எலும்பு மற்றும் எலும்பு திசுக்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
5.தக்காளி சாற்றில் வைட்டமின் கே,உள்ளது .இது எலும்பில் இருக்கக்கூடிய கொலாஜன் அல்லாத முக்கிய புரதமான ஆஸ்டியோகால்சினை வேலை செய்ய உந்துகிறது.
6.தக்காளி ஜூசில் உள்ள ஆஸ்டியோகால்சின் எலும்புகளுக்குள் கால்சியம் மூலக்கூறுகளை கனிமமாக்க உதவுகிறது. இதனால் நம்முடைய எலும்பு அடர்த்தியாக இருக்கும்.
7.தக்காளி பழச்சாறை தொடர்ந்து நாம் குடித்து வரும் பொழுது அது நம்முடைய தோல் செல்களை விரைவில் சரி செய்து ஆரோக்கியம் தருகிறது
8.தக்காளி ஜூஸ் இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடி நம் ஸ்கின்னை பாதுகாக்கும்
9.தக்காளி ஜூஸில் வைட்டமின்கள் மற்றும் இதய செயல்பாட்டிற்கு தேவையான பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
10.தக்காளியில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் இதய நோயாளிகளும் உண்ணலாம் .


