பாகல் இலைச்சாறை கொதிக்க வைத்து உட்கொள்ள எந்த நோய் பயந்து ஓடும் தெரியுமா ?
பொதுவாக கசப்பு பொருளில்தான் நம் நோய் எதிர்ப்பு சக்த்தி அடங்கியுள்ளது .அந்த வகையில் கசப்பான பாகற்காயிலும் .அதன் இலையிலும் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தி மறைந்துள்ளது .இந்த பாகற்காய் சுகருக்கு நல்லது ,மேலும் இதன் நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.பாகல் பழம், பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
2. பாகற்காய் மட்டுமல்ல இலைகூட மருத்துவத் தன்மை உடையதே!
3.ஒரு அவுன்ஸ் பாகல் இலையை இடித்து பெற்ற சாறுடன், வறுத்துப் பொடித்த சீரகத் தூளை கலந்து கொள்ளவும்
4.மேற்கூறிய கலவையை காலை, மாலை உட்கொண்டால் விஷக்காய்ச்சல் ஓடியே போகும்.
5.அடுத்து பாகல் இலைச்சாற்றுடன் காசிக்கட்டியை இழைத்து வைத்து கொள்ளவும்
6.மேற்கூறிய கலவையை சிரங்கின் மேல் பற்று போல போட்டு வந்தால் சிரங்கு உதிர்ந்து,ரத்தம் சுத்தமாகும்.
7.பாகல் இலைச்சாறு ஒரு அவுன்சும், ½ அவுன்ஸ் நல்லெண்ணெயும் கலந்து அருந்தினால் காலரா கட்டுப்படும்.
8.பாகல் இலைச்சாறை கொதிக்க வைத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்தலாம்.
9. அடுத்து பாகல் இலைச்சாறுடன் சம அளவு பசுமோர் கலந்து வைத்து கொள்வோம்
10.மேற்சொன்ன கலவையை மூன்று நாட்கள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய்கூட காணாமல் போகும்.


