மாதுளைப்பழத்தின் சாற்றை இரவில் தடவினால் என்ன நன்மை தெரியுமா ?

 
madhulai madhulai
பொதுவாகவே பெண்கள் தங்களின் அழகை பராமரிக்கவும் ,அழகை கூட்டவும் அதிகம் மெனக்கெடுவார்கள் .அதற்காக பல பெண்கள் பியூட்டி பார்லர் சென்று பல ஆயிரங்களை செலவும் செய்து வருகின்றனர் .ஆனால் உதட்டில் சில பெண்களுக்கு கருமை படர்ந்திருக்கும் ,அந்த கருமையை போக்க அழகு நிலையம் சென்றால் அதிக செலவு பிடிக்கும் ,அந்த வகையில் அந்த உதட்டு கருமையை எப்படி இயற்கை முறையில் போக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.உதட்டு கருமையை போக்க பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேனை அரைத்து உதட்டில் பூசி பின்னர் 5 நிமிடம் கழித்து நீரில் கழுவினால் நல்லது.
2.உதட்டு கருமையை போக்க  தினசரி பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை உதட்டில் தடவினால் சிறந்தது. 
3.உதட்டு கருமையை போக்க மாதுளைப்பழத்தின் சாற்றை இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு தடவினால் உதட்டில் உள்ள கருமை நீங்கும்.
4.உதட்டு கருமையை போக்க எலுமிச்சை சாற்றை உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவி இறுதியில் லிப் பாம் போட்டால் நல்லது.
5.உதட்டு கருமையை போக்க தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
6.உதட்டு கருமையை போக்க உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி மற்றும் கருமை நீங்கும்.
7.உதட்டு கருமையை போக்க இரவில் ரோஸ் வோட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவினால் நல்லது.
8.இந்த முறையில் செய்து வர உதட்டில் உள்ள கருமை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.