பலவீனமான இதயம் உள்ளவர்களை பாதுகாக்கும் பார்லி கஞ்சி -செய்யும் முறை

 
benefits of barley kanji benefits of barley kanji

உலக அளவில் மனிதர்கள் உண்ணும் பிரதான உணவு தானியங்களாக அரிசி, கோதுமை இருக்கிறது. இதற்கு அடுத்த அளவில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியம் வகையாக பார்லி தானியம் இருக்கிறது. இந்த பார்லியை தமிழில் பார்லி அரிசி அல்லது பார்லி தானியம் என அழைப்பார்கள். மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

 உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலைப் (lowering bad cholesterol) போக்கி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்தும், வைட்டமின் பி சத்தும் உடலுக்கு மிகவும் அவசியமானது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பார்லி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

பார்லியில் பீட்டா க்ளூக்கோன், பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்றும் தன்மை இருக்கும் பார்லியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றான பார்லியை டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

பார்லியை கஞ்சியாக மட்டுமல்ல, சூப்பாகவும் செய்து குடிக்கலாம். சூப் செய்வது மிகவும் சுலபமானது.முயற்சித்துப் பாருங்கள்...

பார்லி – 1 டேபிள்ஸ்பூன், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள்கால் கிலோ

பூண்டு – 5 பல்

மிளகுத்தூள், உப்புதேவைக்கேற்ப

கொழுப்பு நீக்கிய பால் 

செய்முறை: பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள், பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் அதிகம் குழைவாக வேகக்கூடாது. பிறகு, அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.

 பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது. 
எலும்பு, பற்கள் வலிமை பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைந்து இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

 நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. 

பார்லி தானியங்களில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, நோய்கள் சுலபத்தில் பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் வைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு வலுவடைகிறது. 

 பார்லி கஞ்சி அருந்துபவர்கள் மற்றும் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படும். தோல் சுருக்கம், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தோலின் நிறத்தை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. பார்லி மாவை நீரில் கலந்து பிசைந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைகிறது.