அதி மதுரத்தை தேனில் குழைத்து சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனை சரியாகும் தெரியுமா?

 
adhai adhai

குன்றிமணி என்னும் செடியின் வேரே அதிமதுரம்

இனிப்புச் சுவையுள்ள இந்த அதிமதுரம்… ஏராளமான நோய், குறைபாடுகளை சரி செய்யக்கூடியது.

ஒவ்வொரு மூலிகையிலும், ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு. இதில், வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்கு புரியும்.
அதிமதுரம், எளிய முறையில் பயன்படுத்தினாலே, பல நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது இது.
மலச்சிக்கலை போக்குவதில் சிறப்பிடம் வகிக்கிறது. சிறுநீர்ப்பை புண்களை ஆற்றுவதில், இதற்கு நிகர் வேறில்லை. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும், சம அளவு எடுத்து வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐந்து கிராம் அளவில், தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

சளி தொந்தரவா? அதிமதுரம், அரிசி திப்பிலி, சித்தரத்தை மூன்றையும், தலா பத்து கிராம் அளவில் சேகரித்து, முசுமுசுக்கை இலை, ஆடா தொடை இலை ஆகியவற்றை, 200 மி., நீர் விட்டு காய்ச்சி சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு என, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும்.

சூட்டினால் வரும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து இளம் வறுப்பாக வறுத்துப் பொடியாக்கி, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை சரியாகும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும்.

Licorice, Sweet Deal for Various Ailments

அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

இதேபோல் அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் இளநரை நீங்குவதோடு தலைமுடி மினுமினுப்பாக மாறும்.

மேலும், தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். அதிமதுரத்தை இடித்து, எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்துச் சலித்து இரவு படுக்கும்போது, டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் சரியாகும்.

போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஒரு கிராம் அளவு அதிமதுரச் சூரணத்தை பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.